கவியின் செல்வன்
நானிலம் ஆளும் நல்லவரே...!
பாலையில் எங்களை தனியே தவிக்கவிட்டு போனதேனோ?
உன்னை போல்
ஓர் கவிஞன் பிறப்பானா?!
அவன் உனக்கு நிகராய்
புகழின் உச்சியில் இருந்தாலும்
எளிமையாய் இருப்பானா?!
நீ ஒருவனே!....
உனக்கு நிகர் எவருமில்லை...
நீ போய்விட்டாய்
பூவுலகை விட்டு
என்றே ஏற்கமுடியவில்லை...
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
என் மனதிலும்
உமது பாடல்களிலும்
படைப்புகளிலும்...
உடலுக்கு தான்
அழிவே தவிர
உயிருக்கு இல்லை
என்றும் எம்முடனே இருக்கும்
கவியின் செல்வன்
(உங்களுக்கு நான்(பிரபாவதி வீரமுத்து) வைத்த பெயர்)
நா. முத்துக்குமார் ஐயாவிற்கு
சமர்பிக்கிறேன்.....
~ பிரபாவதி வீரமுத்து

