அழகே அமுதமா

("கர்ணா" படத்தில் வந்த இனிய பாடல்..
"மலரே மௌனமா மௌனமே வேதமா?..இந்த சந்தத்தில் எனது வரிகள்..நண்பர்களின் பார்வைக்கு)

அழகே அமுதமா .. அமுதும் கசக்குமா
அழகு நிலைக்குமா.. நினைத்தால் கிடைக்குமா -அன்பே
அழகே அமுதமா.. அமுதமே சேருமா

கானல் நீரில் கூட காதல் தெரிவதில்லையோ
மோன நிலையில் நம்மை வாழ்த்தி மகிழ்வதில்லையோ
ஏனோ மனம் தடுமாறுதே ஏனோ கனம் சுமைகூடுதே
ஏனோ மனம் தடுமாறுதே ஏனோ கனம் சுமைகூடுதே
விழிகள் திறவா நினைவில் ..சுகமா
உன்மடி மீது உயிர்... போக்கவா ?

அழகே அமுதமா .. அமுதும் கசக்குமா

இரவு முடிந்தபின்னும் வெளிச்சம் காண மறந்தேன்
மார்பில் தென்றல் வந்து மாய்க்கும் மாயை அறிந்தேன்
பூவே ..என்னை கொல்லாதிரு..சகியே என்னை பிரியாதிரு
பூவே ..என்னை கொல்லாதிரு..சகியே என்னை பிரியாதிரு
உயிரே உணர்வே உணர்வின் உணர்வே
என்னை வாழ வைத்த மங்கையே !

அழகே அமுதமா .. அமுதும் கசக்குமா
அழகு நிலைக்குமா.. நினைத்தால் கிடைக்குமா -அன்பே
அழகே அமுதமா.. ம்ம் ..அமுதமே ம்ம்ம்..சேருமா?ஆஅ

எழுதியவர் : கருணா (20-Aug-16, 9:18 am)
பார்வை : 93

மேலே