விழியசைவு , முறித்து எடுத்த சில சிறகுகள் - 2

என்னே ?
என் விழிகள்
பொய்த்துப் போனதோ ?
அதற்க்கு காரணம்
என் இளமைதானோ ?
அது
அவளின்
விழியொளியை
கற்பனை செய்யச்சொன்னது !
அது
அவளின்
இதழின்
இனிமையை
சுவைக்கச்சொன்னது!
அது
அவளின்
அரூபமான
உருவை
அவதானிக்க சொன்னது !
என் இளமையோ ?
இல்லை
அவளின் பிரகாசமும்.........,
அவளின் இனிமையும்..........,
அவளின் அரூபமும்.........,
என் கண்களை
திறந்து
நேசத்தின்
இன்ப துன்பங்களை
உணரச்சொன்னதோ ?

எழுதியவர் : ஹாதிம் (20-Aug-16, 7:55 pm)
பார்வை : 197

மேலே