அவள் நினைவின் நினைவலைகள் 555
உயிரே...
என்னை நேசிக்கும்
என் உயிர் காதலியே...
காத்திருக்க சொன்னேன்
காத்திருக்கிறாய்...
நாம் சந்திக்கும் இடத்தில்...
சூரியனை காண துடிக்கும்
தாமரையை போல...
முத்தம் ஒன்று கேட்டால்
கொடுக்கிறாய்...
என்னோடு சின்ன சின்ன
கோபம் கொள்கிறாய்...
தாலாட்டு கேட்டால் தாயாக
மாறி தாலாட்டு பாடி உறங்கவைகிறாய்...
நான் உறங்காத நேரத்தில் நான்
உறங்கும்வரை...
உரையாடுகிறாய்
என்னோடு கைபேசியில்...
கடற்கரையில் என்
பெயர் எழுதுகிறாய்...
ஆற்று மணலில் மணல் வீடு
செய்து...
என் பெயர் வைக்கிறாய்...
தாகம் என்கிறபோது உன்
இதழ்முத்தம் தந்து...
என் தாகம் தீர்க்கிறாய்...
என் கனவில் தினம் வந்து
காதல் காவியம் படைக்கிறாய்...
புல்வெளியில் நான்
நடைபோட்டால் கூட...
என் பாதம் நோகும் என்று...
உன் கூந்தல் பூக்களில் என்னை
நடைபோடவைக்கிறாய்...
கடற்கரையில் என்னை
கட்டி அணைக்கிறாய்...
ஆற்றங்கரையில் என்னை
அணைத்து கொள்கிறாய்...
குளக்கரையில் என்னை
குனிந்து பார்க்றாய்...
ஏரிக்கரையில் என்னை
ஏக்கத்தோடு பார்க்கிறாய்...
தண்ணீர் எடுக்கும் வேளையில்
என்னை தனிமையில் சந்திகிறாய்...
நீ நீராட செல்லும் வேளையில்
என்னை நீரோடையில் காகவைகிறாய்...
காட்டு கோவிலுக்கு
செல்லும் வேளையில்...
என்னை காவல் காரனாய்
வர சொல்கிறாய்...
எல்லாம் சொன்னாய்
நானும் செய்தேன்...
மஞ்சள் கயிறு கொடுத்து
என் கழுத்தில் கட்டு என்று...
நீ சொல்லபோகும்
அந்த நாள் எப்போது...
நான் காத்திருந்தேன்
என் காதலுடன்...
நான் கண்விழித்து பார்த்தால்
எல்லாம் கனவுதானடி...
நீ இல்லாமல் நான் கடந்து
செல்லும் ஒவ்வொரு நாட்களும்...
உன் நினைவில்தானடி
நான் வாழ்கிறேன்...
நீ என்னை பிரிந்த
அந்தநாள் மட்டும்...
நான் மண்ணில்
மறையும்வரை மறையாதடி...
என்றும் உன்னவன்.....