தாய்
பத்து திங்கள் பரவசமாய் பெற்றெடுத்தாய் !
தங்க மகனாய் தைரியம் ஊட்டி வளர்த்தாய் !
பயிருக்கு வேலியாய் இருந்திட வழிகாட்டினாய் !
உலகம் போற்றும் உன்னதனாய் மாற்றினாய் !
வெற்றி என்றும் உன்னுடன் ;
உனக்கு வேண்டாம் பயம் :
என்றும் உன்னுடன் ஜெயம் என்றாய் !
வறியவராய் வாடியவரை வளமாக்க தூண்டினாய் !
ஆனால் ,
உம் மரணம்
ஆரா புண்ணாய் வருண்டுகிறது ....
வேண்டும் தாயே !
நீர் வேண்டும் ...
என்னை வளமாக்கிய நீர் வேண்டும் ;
எப்போது உம்மை காண்பேன் ???
தீப சுடராய் ஒளிரும் ,
கதிரவன் அழிந்த பின்னா ???
அதனன்று ,
எம் உயிர் இவ்வையகத்தை நீக்கி
பிரிந்த பின்பா ????
விடை சொல் தாயே !!!!!!