மாறிடுமே இவர்களின் வாழ்க்கையும்

பகிர்ந்துண்ணும் உள்ளம் கொண்ட
பச்சிளம் நெஞ்சங்கள் இவர்களோ
பெற்றவர்களை அறியா செல்வங்கள்
மற்றவர்களும் கவனியா பிள்ளைகள் !
சுழலுகின்ற சக்கரமோ ஒருகையில்
சுழலவுள்ள காலத்தைக் காட்டுகிறது !

நேர்ந்திடும் தவறுகளால் பிறந்தாலும்
தேர்ந்தெடுத்த அரசாங்கம் தவறினாலும்
காத்திடும் உள்ளமுடன் செயல்பட்டால்
மாறிடுமே இவர்களின் வாழ்க்கையும் !

பசியும் பட்டினியுமே வாழ்க்கையெனில்
பாதைதனை மாற்றிடவே வாய்ப்பாகும்
ஆதரவுடன் அணைக்கும் மனமிருந்தால்
அறிவார்ந்த பிள்ளைகளாய் ஆகிவிடும்
வருங்கால விஞஞானியாய் மாறிவிடும்
உதவிடுவோம் வாழ்ந்திட வழிசெய்வோம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Sep-16, 10:49 pm)
பார்வை : 175

மேலே