காவிரி – தீ பொறி

கண்ணியத்துக்குறிய கன்னட இனத்தவரே..!
கணத்த இதயத்துடன் உமக்கோர் விண்ணப்பம்!

இனத்தோடு இனமாக நாமானோம் ஐக்கியம் – ஆனால்
காவிரி விவகாரத்தில் நாமெல்லாம் பைத்தியம்..!

நதிநீரை தர மறுப்பது மாநில உரிமை - அதே
நதிநீரை கேட்டுப் பெறுவது தேசிய உரிமை..!

கால் கருகிய கரிகால் பெருவளத்தான்
சீர்செய்து செப்பணிட்ட காவிரிப்படுகை
இயற்கை அன்னை நமக்களித்த அரியகொடை – அதை
இருபேரும் சமமாக பகிர்ந்து கொள்வதே முறை..!

கர்நாடக முதல் மந்திரி முறையாக தர மறுத்தார்
தமிழ்நாடு முதல் மந்திரி முறையாக முறையிட்டார்

திறனாய்வு செய்த உச்சநீதி மன்றம் – வழங்கிய
தீர்க்கமான தீர்ப்பை ஏற்க ஏன் தயக்கம்..?

காவிரி நதி நீருக்குத்தானே உங்கள் எதிர்ப்பு
அதற்காக தமிழக லாரிகள் எதற்காக எரிப்பு..?

வாகனங்களை எரிப்பதால் மட்டுமே வழங்கிய தீர்ப்பு
திருத்தி எழுதப்படும் என்ற உங்கள் நினைப்பு
உள்ளதும் போச்சடா நொள்ளக்கண்ணா – மிச்சம் மீதி
இருப்பதையும் இழந்தோமடா ஒண்ணு ஒண்ணா கதைதான்!

கூத்தாடிகளின் குள்ளநரி பேச்சுகளுக்கு செவி கொடுக்காதீர்
அவர்களெல்லாம் கோலிவுட்டில் கோடிகளில் புரளுபவர்கள்!
நம்மையெல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி - ஊட்டி
கொடைக்கானலுக்கு சூட்டிங் செல்பவர்கள்! – நாமோ
அன்றாடம் காய்ச்சிகள்! நமக்கு ஆவேசம் ஆகாது
நம்மாவேசத்தை ரசித்து கூத்தாடிகள் பாயாசம் குடிக்கப்
பார்க்கிறார்கள்..! உஷார்..! உஷார்…! உஷார்…!

எழுதியவர் : சாய்மாறன் (13-Sep-16, 8:55 am)
பார்வை : 66

மேலே