பெய்யுதே என்னுள்ளே இன்ப மழை - நேரிசை வெண்பாக்கள்

முகமது சர்பானின் கருத்தாக 'பூக்களின் தோட்டத்தில் தேன் உறிஞ்சும் வண்டை போல நற்றமிழ் தோட்டத்தில் காற்றாய் உள்ளம் அலைகிறது' என்ற கருத்தின் அடிப்படையில் புனைந்த வெண்பாக்கள்.

இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்

பூக்களின் தோட்டத்தில் தேனுறிஞ்சும் வண்டைப்போல்
பாக்களும் நற்றமிழ்த் தோட்டத்தில் - ஆக்கமுடன்
தென்றலைப்போல் காற்றாய்ப் பரவிட தேன்மாரி
என்னுள்ளே இன்ப அலை! 1

பூக்களின் தோட்டத்தில் தேனுறிஞ்சும் வண்டைப்போல்
பாக்களும் நற்றமிழ்ப் பந்தலில் - ஆக்கமுடன்
தென்றலைப்போல் காற்றாய்ப் பரவிட தேன்மாரி
என்னுள்ளே இன்ப அலை! 2

பூக்களின் தோட்டத்தில் தேனுறிஞ்சும் வண்டைப்போல்
பாக்களும் நற்றமிழ்ப் பந்தலில் - ஆக்கமுடன்
தென்றலைப்போல் காற்றாய்ப் பரவிட பெய்யுதே
என்னுள்ளே இன்ப மழை! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Sep-16, 3:18 pm)
பார்வை : 192

மேலே