தண்ணீருக்கு இரத்தம்

கரைப் புரண்டு ஓடிய நீயும்
கரைப் பக்கம் வந்து
எத்தனை நாளாச்சு
கரையெல்லாம்
இப்ப கள்ளி செடிகள்

அப்படி வந்தாலும்
உன்னை குழியில் தள்ள
மணலை அள்ளி வித்தாச்சு
இன்னும் புரியவில்லை எங்க
தலையெல்லாம் ஏன் மண் ?

தப்பி இருந்தாலும்
உன்னை கறையாக்க
இரசாயன கழிவை கலந்தாச்சு
வாழ்வே இனி என்றும்
இரசாயன மருந்து மட்டும்

நீ வந்தாலும் வாராவிட்டாலும்
உன்னை நம்பி
அரசியல் பலநாள் பண்ணியாச்சு
நீ வாராவிட்டா
விளைகாடெல்லாம் சுடுகாடு

எத்தொடும் சேரும்
தண்ணீருக்கு
வண்ணம் இப்ப வந்தாச்சு
தண்ணீருக்கும் இரத்தம்
சித்தம் கலங்க
பலிகள் உண்டாச்சு
இரத்தமே இங்க மலிவாச்சு

- செல்வா

எழுதியவர் : செல்வா (19-Sep-16, 8:21 pm)
Tanglish : thanneerukku irtham
பார்வை : 84

மேலே