என் மனமாவது காயும்
காதல் படைத்த பிரம்மனும்
பித்தம் அடைவான்
என்னவள் காதலை கண்டு...
இதில்
நான் மட்டும் என்ன விதி விலக்க...
அடை மழைக்கு
குடை படைத்த
பிரம்மன்
வேறு வழியில்லாமல்
என்னவள் முத்த மழைக்கு
என்னை படைத்திருக்கிறார்..
காலையிலே
முத்தத்தால் குளிப்பாட்டுகிறாயே
பிறகு எப்படி மீண்டும் குளிப்பேன்
முடிந்தால் உன் வெட்கத்தால்
துடைத்துவிடு
என் மனமாவது காயும்...
கோயிலுக்கு சென்று
ஏன் சிலையாய் நிற்கிறாய்
பார்
பூசாரி உன்னை அர்ச்சிக்கிறார்
என் பெயரை சொல்லி...
-ஜ.கு.பாலாஜி-