வீரமகனே எழு

உன் பெயரோ தெரியாது
மத இனமும் அறியாது
உன் உறவும் புரியாது
உனைனான் பார்த்தது கிடையாது...

எங்கோ நீ பிறந்தாய்
எங்கோ நான் வளர்ந்தேன்
என்னுள் உணர்வு உண்டு
என் உள்ளத்தில் இடமுண்டு...

என் நாட்டை காத்தவனே
எல்லை கோட்டில் நின்றவனே
உனக்குள் தூக்கம் தொலைத்தவனே
எனக்குள் துக்கம் நிறைத்தவனே...

வெறும் ஈரம் எனக்குள்ளே
பெரும் வீரம் உனக்குள்ளே
ஏன் தவழ்ந்து இறந்திட்டாய்
எனை இறந்து காத்திட்டாய்..

உன்தியாகம் கல்லில் பதித்து
உயரஞ்சலி உன்னில் குவித்து
தாய்மண்ணில் மீண்டு பிறக்க
தருகிறேனென் வீர வணக்கம் ..!

ஜெய் ஹிந்த்.!
★★★★★★★★★★
குறிப்பு.: இது போன்று எத்தனையோ வீரர்களின் தியாகத்தால் காக்கபடும் நம்நாடு அரசியல்வாதிகளால் ஜாதி, மத, இனத்தின் பெயரால் அழிக்கபடுகிறது.
நினைவில் கொள்வோம்.!

எழுதியவர் : குமரி பையன் (24-Sep-16, 11:58 am)
பார்வை : 916

மேலே