என் காதலும் தலைசாயும்
என் உயிரும் உன்னிடத்தில்
உன் உயிரும் என்னிடத்தில்
என் காதலும் கலவரத்தில்
மறையுதே ஓரிடத்தில்
என் நெஞ்சில் பனி துளியாய்
உன் காதலும் படருதே...!
உன் பெயர் சொல்லியே
என் காலமும் நகருதே...!
மனதை கலைத்து
என் நெஞ்சில்
தேன்துளி தெளித்தவளே...!
உயிரை துளைத்து
என் காதல் விதையில்
விஷத்துளி தெளித்தவளே...!
உன் பேச்சு பட்டு
நானும் மறைகிறேன்...!
உன் மூச்சு பட்டு
நாளும் உறைகிறேன்...!
என்னோடு நீ இருந்தால்
என் காதலும் அலைபாயும்...!
என்னோடு நீ இறந்தால்
என் காதலும் தலைசாயும்...!
-ஜ.கு.பாலாஜி-