மனதில் பௌர்ணமி
நிலவு இல்லாத வானம் போல்
கலையிழந்து காண்கிறேன்.
அவள் அருகில் இல்லாத - இந்த
அமாவாசை நாட்களில். .
என்று வரும் பௌர்ணமி - என்று
ஏங்கிக் கொண்டே இருக்கிறேன்.
வளர்பிறையாய் வளர்ந்து செல்லும்
என் ஆசை நிலவும் பௌர்ணமியாய்
பிரகாசிப்பது எப்போது?
வானிலவும் வந்து விட்டது
வானெங்கும் பௌர்ணமியின் கொண்டாட்டம்.
என்னிலவே நீ எங்கே?
என் மனதிலும் பௌர்ணமி வர.......