மறுடியும் மொதல்ல இருந்தா

“நமக்கு கல்யாணம் முடிஞ்சி இத்தன வருஷம் ஆகிடிச்சி.. ஒரு தடவயாச்சும் ஊட்டிக்கு கூட்டிட்டு போயிருக்கீங்களா.. ஒங்கள கட்டிக்கிட்டு.. ம்ம்ம்.. எந் தலவிதி அப்டி..”

இந்த தடவ வெக்கேஷன் வாறப்போ ஒன்ன கண்டிப்பா கூட்டிட்டு போறேன்டி செல்லம்..

“கிழிச்சீங்க.. எனக்கு லாங் ட்ராவல் ஒத்துக்காது, அதுவும் மலையில ட்ராவல்னா தலசுத்தி வாமிட் எடுத்துடுவேன்னு தெரிஞ்சே சொல்லுதீங்களே..”
சரி, மதுர அதிசயம் தீம் பார்க்குக்கு போலாமா..?

“எதுக்கு..? ஜெயண்ட்வீல்ல ஏத்தி விட்டு என்ன கொல்லப் பாக்குறீங்களாக்கும்..?
தாலிச்செயினு பழைய மாடலாகிடிச்சி.. புதுச்செயினு மாத்தித்தாங்கன்னு எத்தன தடவ கேட்ருக்கேன்..?”

லீவ் சேலரி கெடச்சதும் அந்தப் பணத்துல கண்டிப்பா வேற செயின் மாத்திடலாம்டா.. கோச்சுக்காத..

லூஸு மாதிரி பேசாதீங்க.. வீட்டு லோனு பாக்கி இருக்கு.. அத யாரு அடப்பாங்க..?

நானென்ன ஒவ்வொருத்தி மாதிரியும் மாசத்துக்கு நாலு சேல எடுத்தும் பியூட்டி பார்லரும்னா ஒங்க காச வீணாக்குறேன்..? ”

நா அப்டி சொல்லவே இல்லியேம்மா.. ஊருக்கு வந்ததும் போத்தீஸ் போறோம்.. ஏழெட்டு சேலைகள் எடுக்குறோம்.. இப்ப சந்தோஷமா..?

“க்க்கும்.. அந்தப் பணத்துக்கு புள்ளைகளோட ஸ்கூல் ஃபீஸ கட்டிட்டுப் போகலாம்.. துட்ட எதுக்கு வீணா செலவாக்கணும். வாழ்க்கையில ஒரு ஆசாபாசம், நிம்மதியே இல்லாமப் போச்சி..”

(பரிதாபமா) இப்போ நா என்னதான் பண்ணனும்னு சொல்லும்மா..

“ஊட்டிக்கி என்ன கூட்டிட்டுப் போவீங்களா.. மாட்டீங்களா..? ”
= மறுடியும் மொதல்ல இருந்தாஆஆஆ...

எழுதியவர் : செல்வமணி (2-Oct-16, 12:04 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 319

மேலே