கடற்கரைக் காட்சி…

மாறி யிருப்பான் மனிதனென்று
மீண்டும் அலைகள் கரைவந்தன,
ஏறி யிருக்குது கணக்கினிலே
எண்ணில் நில்லாக் குற்றங்கள்,
நாறிக் கிடக்குது நிலமெல்லாம்
நன்றி கெட்ட மனிதனாலே,
மாற மாட்டான் மனிதனென்று
மறுபடி சென்றன கடலுக்கே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Oct-16, 7:08 am)
பார்வை : 94

மேலே