தம்பூரா விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

தம்பூரா நல்விநாய கன்தாளை என்றுமே
நம்பிப் பணிந்தேத்த நாதனவன் - நம்பெருமான்
தான்துணை வந்திடுவான்; தம்பூரா கையிலேந்தி
நான்மகிழ வேயின்(று) எழுந்து! 1

தம்பூரா கையிலேந்தி தானே மகிழ்ந்துதான்
தும்பிக்கை யானும் துரிதமாய் - நம்பிக்கை
நல்கிடுவான்; வேழ முகத்தானை நம்பியே
அல்லும் பகலும் வணங்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-16, 3:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே