நர்த்தன விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

இடதுபாதம் தூக்கியாடும் நர்த்தன நாதன்
உடன்வருவா னென்பரே ஊரார் - மடம்கொண்டே
எண்ணிய போதெல்லாம் எங்கள் குறைதீர்ப்பான்
திண்ணமிது என்பேனே நான்! 1

மடம்கொண்டு - அறியாமையால்

நர்த்தன நாயகனாம் நல்விநாய கன்தாளை
அர்ச்சனை செய்மலரால் ஐயனும் – தர்(இ)சனம்
நல்கிடுவான்; நாமவனைப் போற்றிப் பெறுவோமே
எல்லையில்லா இன்பம் இனிது! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-16, 11:27 am)
பார்வை : 72

மேலே