ராஜபாளையம் நான்முக விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நான்முக நல்வினாய கன்பாதம் நெஞ்சினில்
தான்பற்றிப் போற்றிட என்றென்றும் - வான்மழையாய்க்
கொட்டும் அருள்வெள்ளம்; சொல்லவும் வேண்டுமோ
எட்டுத் திசையுமவன் பேர்! 1

வண்ணமிகு நான்முக நல்வினாய கன்பாதம்
எண்ணித் துதித்துவந்தால் என்றென்றும் - திண்ணமாய்க்
கிட்டும் அருள்மழை; கொண்டாட வேண்டும்திக்(கு)
எட்டுமவன் பொன்றாப் புகழ்! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-16, 8:24 pm)
பார்வை : 60

மேலே