படிக்கும் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

ஏடுதனைக் கைகளில் ஏந்திப் படிக்கின்ற
பீடுடைய ஏந்தல் விநாயகனை - நாடித்
துதிப்போர்க்கு ஞான்றும் துணையிருப் பானை
கதியென்றே நம்பு தொடர்ந்து! 1

சட்டமாய் உட்கார்ந்தே ஏட்டினை ஏந்தியோர்
திட்டமாய் வாசிக்கும் தன்யனை - வட்ட
முகபடிக்கும் நல்வினாய கன்தாளை உந்தன்
அகத்திலே வைத்து வணங்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-16, 10:47 am)
பார்வை : 67

மேலே