புல்லாங்குழல் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

புல்லாங் குழல்விநாய கன்தாளைப் போற்றியே
எல்லோரும் நன்மைபெற ஏதுவாய் - வல்லவனை
என்றென்றும் ஏற்றமோ(டு) ஏத்திப் புகழ்வோமே;
நன்றாம் வளம்தருவான் வாழ்வு! 1

எல்லோரும் இன்புற எங்களுக்(கு) ஈடில்லா
வல்லமை தந்திடவே வந்திடுவான் - புல்லாங்
குழல்விநாய கன்தா(ன்) அவனதுபொற் பாதக்
கழல்போற்றி நன்றே வணங்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-16, 9:02 pm)
பார்வை : 190

மேலே