தளிர்

வைதேகிக்கு பொன்சாய், (Bonzai) செடிகளை வளர்ப்பதில் தனி ஆர்வம் அதிகம். பொன்சாய் மரங்கள் மற்றைய மரங்கiளாடு ஒப்பிடும் போது சுதந்திரமான வளர்த்;தியைக் கொண்டவையல்ல. ஓரு பூச்சட்டிக்குள் அதன் வளர்த்தியானது முடங்கி வளர்ந்து இருப்பதினால், பார்ப்பதற்கு அழகாகவும் அபூர்வமாகவும் இருந்தால் அதற்கு விலை அதிகம். பல வருடங்கள் வளர்ந்து உயரமான மரமாக வளரும் மரத்தைப் போல சூழலுக்கு உதவும் மரமல்ல பொன்சாய். பொன்சாய் மர வளர்ச்சி முறை மூலம அதனை வளர்த்து, கட்டையான வளர்ச்சியைக் கொண்ட மரத்; தோற்றம் கொண்டதாக இருப்பதை கற்பனை செய்து பார்த்தால் அதன் ஒரு பரிமாணத்தின் அழகு தெரியும்;. தாவரத்தை வளரவிடாது, தன் ஆசைக்காக சட்டிக்குள் வளர்த்து, அதன் தோற்றத்தை பார்த்து இரசிப்பவள்; வைதேகி. . அவள் எதை நட்டாலும் அச்செடியானது கிசுவென்று வளர்ந்து, இலைகள்விட்டு, பூத்து காயத்துவிடும். அவளுக்கு பசுமையுள்ள விரல்கள் என்று இனத்தவர்ளும் நண்பர்களும் பேசிக்கொணடார்கள். அவளின் வீடு தேடி வந்து அதிக விலை கொடுத்து பொன்சாய் செடிகளை வாங்கிச் சென்றவர்களும் உண்டு.

திருமணமாகி அழகான குழந்தையைப் பெற்றெடுத்து அக்குழந்தை வளர்ந்து பலரால் பராட்டப்படும் அளவுக்கு அழகனாகவும,; சிறந்த கல்விமானாக வர வேண்டும் என்பது வைதேகியின் நீண்ட காலக் கனவு. இது எல்லா இளம் தம்பதிகளுக்கு இருக்கும் கனவாகும். வைதேகி அழகானவள். அதே போல்; கார்திகேயனின் தோற்றத்தையும் , அறிவையும்கண்டு கல்லூரியில் படித்த காலத்திலிருந்து, அவனைக் காதலித்து,; பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்தவள் வைதேகி. அவள் கணவனிடம் விரும்பிக் கேட்டுக்;கொண்டது தனக்கு ஒரு அழகான குழந்தை ஒன்றுக்கு அவன் தந்தையாக வேண்டும் என்பதே. அவள் அவனிடம் விரும்பி கேட்டதில் அர்த்தம் இருந்தது. அவளுக்கு சாஸ்திரத்தில் அவ்வளவுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறக்கப் போகும் குழந்தை குறையுள்ள குழந்தையாகயிருக்லாம் என்று குடும்ப சாஸ்திரக்காரன் ஒருவன் சொன்னதாக வைதேகியின் தாயும்; தகப்பனும் அடிக்கடி அவளுக்குச் சொல்லி வந்தது, அவள் மனதில் பயத்தை உருவாக்கிவிட்டது.

திருமணமாகி இரு வருட இடைவெளிக்குப் பி;ன்னர் வைதேகி கரு தரித்தாள். கார்த்திகேயன் மனைவியை டாக்டரிடம் கூட்டிப் போய் காட்டிய போது அல்டிரா சவுண்ட் ஸ்கான் உற்பட பல பரிசோதனைகளும்; செய்த பின்னர் அவர் சொன்னது காரத்திகேயனுக்கும், வைதேகிக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

“வைதேகியின் கருப்பை பிள்ளையின் வளர்ச்சிக்கும், அசைவுக்கும் இடஞ்சலாக இருக்கிறபடியால், பிரசவம் சுகப் பிரசவமாக இருக்காது. தேவைப்பட்டால் சிசேரியன் ஒப்பிரஷன் செய்ய வேண்டியும் வரலாம்.” என்று முன் எச்சரிக்கை செய்தார் டாக்டர்.

அதனால் குழந்தைiயின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துணவு தேகப்பியாசம் ஆகியவற்றை தவறாமல் வைதேகி செய்து வந்தாள். அவளுக்கு இரத்த அழுத்தம் , நீரழவு, போன்ற தேக நிலை தொடர்புள்ள வியாதிகள் இல்லாவிட்டாலும் இந்த நிலை, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு எதற்காக ஏற்பட்டுள்ளது என்பது அவளுக்குப் புதிராக இருந்தது,

சாத்திரங்கள், மத சம்பிரதாயங்கள்,; மேல் அக்கரையில்லாத வைதேகிக்கு, படிப்படியாக கடவுள் பக்தி தோன்றத்; தொடங்கியது. தினமும் முருகன் படத்தின் முன் நின்ற வணங்குவதை அவளின் பெற்றோர்கள் கவனித்தார்கள். வைதேகியின் பெற்றோருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. குழந்தையின் வளரச்சி குறைவாக இருக்கிறது என டாக்டர் சொன்ன பின்னர், அவளுக்குப் பொன்சாய் மர வளர்ப்பதில் ஆர்வம் குறைந்தது. பொன்சாய் மரம் மேல் தான் ப்ரியம் காட்டி வளர்த்ததால் தானோ என்னவோ தனக்குக் கடவுள் கொடுத்த தண்டனை என அவள் கருதினாள்.

ஏழு மாதத்தில் குழந்தை ஒப்பிரேஷன் இல்லாமல் பிறந்ததை அவள் எதிபார்க்கவில்லை. பிறக்கும் போது குழந்தையின் நிறை 4 இறாத்தல். குழந்தையின் நீளம் சாதாரண குழந்தையிலும் பார்க்க பதினைந்து அங்குல நீளம். இக்காரணத்தால் ஆஸ்பத்திரியில் சில கிழமைகளுக்கு இன்கியூபேட்டரில் வைத்து குழந்தையின் அசவையும், நிறையையும், வளர்ச்சியையும் அவதானிக்க டாக்டர்கள் தீர்மானித்தார்கள். வைதேகிக்குப் பிறந்தது ஆண் குழந்தை. வைதேகி ஆசைபட்டது போல் அழகான குழந்தையாக இருந்தாலும் குறையுள்ள தோற்றத்தோடு பிறந்;தது கார்த்திகேயன் தம்பதிகளுக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது. தனது பூட்டனார் இந்த குறைபாடுகளோடு பிறந்ததாக கார்த்தகேயன் மனைவிக்கு சொன்னான். தன் பாட்டனாரை “கட்டைக் கந்தையர்” என அடைப் பெயரிட்டு ஊரார் அழைத்ததாக காhத்திகெயனின் தந்தை வைதேகிக்குச் சொன்னார். பிறந்த குழந்தையின் அமைப்பும் மரபணுவோடு தோடாபுள்ளதாக இருக்கலாம் எனக் காரணம் சொன்னார்.

“அப்பா உங்கள் பாட்டனார், உருவத்தில கட்iயானாலும்; பிஸ்னசில் பெரிய புள்ளி எனப் பெயர் வாங்கியவராயிட்டே. பலர் அவரை சரியான சானக்கியன் என்று கூட சொன்னதாக கேள்விப்பட்டனான். அவர் சேர்த்த சொத்து தான் உங்களுக்கு முதிசமாக கிடைத்தது”இ என்றான் தகப்பனிடம் கார்த்திகேயன்.

“ நீ சொல்வது உண்மை கார்த்திகேயா. அவரது வளர்ச்சியில் தடைபட்டிருந்த சக்தி முழுவதும் அவரது முளைக்குள் திரண்டு, வியக்கத்தக்க புத்திசாலியாக அவரை ஆக்கியது. ஒரு இடத்தில குறையிருக்கும் போது இன்னொரு இடத்தில் நிறைவுயிருக்கும்” என்று தனக்கு பலர் சொன்னதை மகனுக்குச் சொன்னார்.

தனது மாமனார் கார்த்திகேயனுக்கு சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் வைதேகி.
“இதற்கு தான் நீ கார்த்திகேயனை திருமணம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்று வைதேகியின் தந்தை அவளின்; திருமணத்தை எதிர்த்ததிற்கு விளக்கம் கொடுத்தார்.

“அப்பா இனி இதை பற்றிப் பேச வேண்டாம். அழகான குழந்தை எங்களுக்கு பிறந்து விட்டது. அவனை வளர்த்;து, அறிவாளியாக்குவது எங்களுடைய போறுப்பு. இதற்கு மேல்; பிள்ளைகளைப் பெறப் போவதில்லை. இனி வரும் குழந்தைகளும் இந்த நிலை ஏற்படலாம் அல்லவா? வைதேகி தன் மனதில் உள்ளதைத் தன் பெற்றோருக்கு எடுத்துச் சொன்னாள்.

குழந்தைக்கு பொருத்தமான பெயராக அகஸ்தியன் என்று பெயர் வைத்தார்கள்; கார்த்திகேயன் தம்பதிகள். காலப் போக்கில் அமைதியான போக்கோடும், சிரித்த முகத்தோடும், எதையோ தேடுவது போன்ற துரு துருத்த கண்களோடு அகஸ்தியன் இருந்தான். அவனது 4 அடி உயரமுள்ள குள்ள உருவத்தைக் கண்டு விமாசிக்காதவரகள் இல்லை. ஆனால கார்த்தகேயன தம்பதிகள் அதையிட்டு கவலைப்படவில்லை.

“என் மகன் பொலீசிலோ அல்லது இராணுவத்திலோ சேரப் போவதில்லை. ஆகையாhல் எவரும் அனது உயரம் பற்றிக் கவலைபடத் தேவையில்லை. உலகில் எத்iனெயோ குள்ள மனிதர்கள் அறிவாளிகளாக, அரசியல் வாதிகளாக, மருத்துவர்களாக, பாடகர்களாக. நுடிகர்களாக வாழவில்iயா, ஏன் மலையாள சினிமாநடிகர் அஜீத் குமார் இரண்டரை அடி உயரம் தானே. அவர் திருமணமட் செய்து வாழவில்லையா. பல தமிழ்; படங்களில் முன்னனி நடிகர்களோடு நடித்த குள்ளமணி என்ற நகைச்சுவை நடிகரைப் பற்றி கேள்விபடவில்லையா? அவரும் திருமணமாகி மனைவி மக்களோடு வாழ்ந்தவர்தான். ஏன் வரலாற்றில் 18 சித்தர்களில் முதல் சித்தராக போற்றப்படுபவர் அகத்தியர். அவர் கூட குள்ளதோற்ற உள்ளவர் தானே. சப்த ரிஷிகளில் ஒருவராக கருதப்படுகிறார். அகத்தியருக்கு பல வேத மந்திரங்கள் இயற்றிய பெருமை உண்டு. அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், இவருடைய சீடர் ஆவார். இதெல்லாம் ஒரு குள்ளமான ஒருவரின் சாதனைகள். ஏன் என் மகனும் அப்படி சாதனையாளனாக வரமுடியாது? கார்த்திகேயன் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக உவமானங்கள் காட்டிச் சொன்னான். அதைக் கேட்டவர்கள் எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.

கல்லூரியில் படிக்கும் போது சக மாணவர்கள் “குள்ளன் கள்ளன்” என்று கேலி செய்வதையிட்டு அகஸ்தியன் கவலைப்படவில்லை. ஆனால் சில மாணவர்களும் ஆசிரியர்களும் அகஸ்தியனின் புத்திசாலித்தனத்தை கண்டு வியப்படைந்தனர். அகஸ்தியன் பல மாணவர்களுக்கு பாடங்களில்; உள்ள சந்தேகங்களை நீக்கினான்.

அகஸ்தியன் பல்கலைக் கழகத் தேர்வு பரீட்சையில் சிறப்பாக சித்தி அடைந்து, மருத்துவ கல்லூரிக்கு சென்றது கார்த்திகேயன் தம்பதிகளுக்கு பெருமையாக இருந்தது. டாக்டர் பட்டம் பெற்று, பெற்றோரின கால்களில் விழுந்து அகஸ்தியன் ஆசிபெற்றபோது, வைதேகியின் கண்களில் இருநது சந்தோஷத்தில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது.

“ பலரின் வக்கனைக்கு ஆளாகிய என மகன் சாதித்து காட்டிவிட்டான்” என்;றாள் வைதேகி.
காலபோக்கில் இருதைய வைத்திய செர்ஜனாகி பல சிக்கலான ஒப்பிரேஷன்கள் செய்து உயிர்களைக் காப்பாற்றி பிரபல சேர்ஜனானான். தனது பாட்டனாருக்கு இருதைய ஒப்பிரேஷன் செய்து, அவரின் உயிரைக் காப்பாற்றிய பெருமை சேர்ஐன் அகஸ்தியனை போய்ச் சேர்ந்தது. பேரும் புகழும் பெற்ற அவனுக்கு பலா திருமணங்கள் பேசிவந்தனர். ஆனால் டாக்டர் அகஸ்;தியன் திருமணம் செய்ய மறத்துவிட்டான். சமூகத்துக்கு சேவை செய்வதே தனது நோக்கம் என்பது அவன் முடிவு..

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் -கனடா) (15-Oct-16, 4:39 am)
Tanglish : thalir
பார்வை : 274

மேலே