புல்லாங்குழலின் நன்றி

ஜடமாய் இருந்த எனக்கு ,
சுவாசம் வந்ததும் ,
சங்கீதமாய் பேசினேன்......நீ கலைஞன் என்று ...!!
கண்ணனுக்காக காத்திருந்து மூங்கிலாகவே இருந்து அழிவதைவிட,
உன் பசி கலந்த காற்றின் மகரந்தத்தால் ,
புல்லாங்குழலாய் எனை மாற்றியதற்கு,
நன்றி சொல்கிறேன்... இசையாக....!!

எழுதியவர் : பாரதி பறவை (17-Oct-16, 1:44 pm)
பார்வை : 104

மேலே