எழுத்து
கதையினை கவிதையாய்
கம்பனும் படைத்திட
கருவென இருந்தது
எழுத்து
உருவென உறவென
உரைத்திட பகிர்ந்திட
உயிராய் இருப்பது
எழுத்து
அரசனும் ஆண்டியும்
அனுதினம் புரிந்திட
அடிப்படை அமைத்தது
எழுத்து
ஓசைக்குள் ஒளிந்திட்ட
உன்னதம் வெளிப்பட
பாடலாய் பிறந்தது
எழுத்து
கோலத்தின் புள்ளியென
மாலையின் மலரென
கவிதயெனும் கோர்வையின்
ஆரம்பம் எழுத்து
மனிதனை மனிதனாய்
வைத்திட
உதித்தது நல்ல
எழுத்து
மனசினை பகிர்ந்திட
காலனை வென்றிட
மருந்தென வந்தது
எழுத்து