மனிதன்
விசாலமான உலகம்
சத்தமில்லாமல்
சுருங்கிவிட்டது.
அன்று
காடு மலை மேடு
ஆறு கடலென
ஆடித் திரிந்த மனிதன்...
அடுத்து
ஊரெனும் ஓர்
வட்டத்துள்
சுற்றி வந்தான்.
பின்பு
வீடு எனும் ஒற்றைக்
கூட்டுள் அடங்கிக் கிடந்தான்.
இன்றோ
அலைபேசியெனும்
கையடக்கக் கவர்ச்சித்திரையில்
ஓர் புள்ளியாய்க் கரைந்தே விட்டான்.