எப்போது வருவாய் நீ
என் கனவுக்கு கருப்பானாய் நீ
என் நினைவுக்கு மருந்தானாய் நீ
என் ஆசைக்கு அழகானாய் நீ
என் அனுபவத்தில் புதிதானாய் நீ...
என் கண்களுக்கு இறையானாய் நீ
என் இதயத்திற்கு சுகமானாய் நீ
என் உடலுக்கு இதமானாய் நீ
என் கட்டிலுக்கு எப்போது விருந்தாவாய் நீ...
என் வீட்டிற்கு எப்போது வருவாய் நீ
என் பிள்ளையை எப்போது தருவாய் நீ
என் ஆசையை எப்போது நிறைவேற்றுவாய் நீ
என் மனைவியாய் எப்போது ஆவாய் நீ...