நதிக்கரை ஞாபகங்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இதயமெனும் நதிக்கரையில் நடக்கையிலே
ஊற்றெடுத்தது ஊறிக்கிடந்த ஞாபகங்கள் !
நெருங்கும் வயோதிகம் நெருடல் ஏற்பட்டது
சுருங்கும் ஆயுளும் சுற்றறிக்கை அனுப்பியது !
அரைக்கால் சட்டையுடன் அரட்டையடித்தது
அறியாதவயதில் ஆலயத்தைச் சுற்றிவந்தது !
புரியாத நிலையில் வடமொழிபடம் பார்த்தது
அந்நியமொழி ஆங்கில மோகம் கொண்டது !
நினைவில் வந்தது முதல்வகுப்பு ஆசிரியை
மனதும் நினைத்தது கல்லூரி பேராசிரியரை !
இடையில் நிகழ்ந்த இயற்கை வினோதங்கள்
படித்தக் காலத்தின் பருவநிலை நிகழ்வுகளை !
முதல்வேலை முதல்நாள் படபடக்கச் சென்றது
மாற்றிட வேலையை உதவிகேட்டுச் சென்றது !
அடுத்த வேலையில் ஐந்தாண்டுகள் கழித்தது
முடிவாக வங்கிப்பணியில் நிலைத்து முடித்தது !
இல்லத்து விழாக்களில் இன்பமுடன் இருந்தது
சோகமான நிகழ்வுகள் சோர்வடையச் செய்தது !
மாறிய சூழ்நிலைகள் மாற்றத்தைக் கொடுத்தது
உடல்நலக் கோளாறால் உள்ளத்தை பாதித்தது !
நினைவலைகள் உணர்வலையில் கலந்து நிற்பது
கழியவுள்ள காலத்தை கவலையின்றிக் கடந்திட !
அந்தநாள் ஞாபகங்கள் மனதிலிருந்து மறையாது
உள்ளவரை உலகத்தில் உள்ளங்களும் மறக்காது !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பழனி குமார்