என் மனமோ தனிமையில் இன்று

கண்டும் காணாது சென்றவள்
விஷத்தை விதைத்தாள் நெஞ்சில்.

தாங்கிக் கொள்ள இயலா இத்துயரம்
என்னை மண்ணோடு சேரச் சொல்கிறது.

ஏணியாய் என்னை ஏற்றம் பெறச் செய்தவள் - இன்று
கல்லறையில் துயில் கொள்ள காரணமாகிறாள்.

எண்ணி கூட பார்க்கவில்லை
உடனே பிரிவாள் என்று

என் மனமோ
தனிமையில் இன்று........

எழுதியவர் : தங்கமணிகண்டன் (25-Oct-16, 10:12 pm)
பார்வை : 186

மேலே