என்ன புள்ள செஞ்சுபுட்ட

என்ன புள்ள செஞ்சுபுட்ட
உசுரோட கொன்னுபுட்ட
கண்ணு ரெண்டும் வத்திகுச்சி
தானாகத் தான் பத்திகிச்சி

இதயம் அது கையளவு
இம்சை செய்யுது கடலளவு
இத்தனை அவஸ்தை தாங்காது
இது தான் காதல் வரலாறு

இத்தனை நாளா எங்கிருந்த
ஏனோ எனக்குள் நீ வந்த
நானும் இருந்தேன் கருவண்டா
மாத்தி புட்ட பொண்வண்டா

வண்ண வண்ண பட்டாம்பூச்சி
மனசுக்குள்ள வந்து போச்சி
எனக்குள் உன்னோட அரசாட்சி
நீ தான் மதுர மீனாட்சி

மன்மதன் விட்ட அம்பு
எனக்குள் பண்ணுது வம்பு
நீயோ வந்த பின்பு
மனசுக்குள் புது தெம்பு

முத்தத்தில் உதித்தது நிலவு
மொத்தத்தில் நீயோ பேரழகு
நீ தான் காதலின் இலக்கணம்
கண்டேன் நானும் உன்னிடம். ....

எழுதியவர் : தங்கமணிகண்டன் (30-Oct-16, 12:29 pm)
பார்வை : 123

மேலே