உன் மடி சாயும் நேரம்
சாலையின் ஓரமாய்
நின்றிருந்தேன்
சேலை கட்டிய புயலொன்று
கண்ணைக் கடந்து சென்றது
மாலை நேரத் தூரலாய்
மனதை நனைத்தது சாரலாய்
மகிழ்ச்சி வெள்ளத்தில்
மனமும் மூழ்கி போனது
உணர்ச்சிகள் வந்து
முந்தியடிக்க
உன் நினைவோ என்னுள்
தந்தியடிக்க
மின்னலாய் மின்னிடும்
உன் விழிகள்
நாள்தோறும் தந்திடும்
சுகமாய் வழிகள்
நாளும் உந்தன்
தரிசனம் காண
நானும் வந்தேன்
உனை பூஜிக்க
ஆதவனும் ஆங்கே
சாயும் நேரம்
அதுதான் உன்மடியில்
நானும் சாயும் நேரம்.