என் அப்பா மறைந்த தந்தைக்கு சமர்ப்பணம்

குறிப்பு : அவர் என்னிடம் அவருக்காக கேட்ட கவிதை

இவரும் என் நண்பர்தான்
நான் பிறந்த பின்புதான்
நட்பின் காரணம் அன்புதான்
நான் வளர்ந்ததே அவர் தெம்பில்தான்

நான் அழுதால் அவர் அழுவார்
என் கண்ணீரை அவர் சுமப்பார்
கண்ணீர் அதிக சுமையில்லை
அவர் சுமக்கும் விதம் சுமையப்பா ...

கண்டிப்பாய் யார் தருவார் பாசத்தை
பாசத்தை தான் தருவார் கண்டிப்பாய்
இந்த கவிதையை எழுதுகிறேன் அவரை நேசிப்பதால்
என் பெயரின் முன் அவர் பெயரை வாசிப்பதால்
என் நெஞ்சில்வைத்து பூஜிப்பதால் ...

எழுதியவர் : ருத்ரன் (30-Oct-16, 7:54 pm)
பார்வை : 99

மேலே