மௌன தவமிருக்கும் உன் இதழ்கள் 555

என்னுயிரே...

உன் விழியோரம்
புன்னகை பூக்க...

மௌன தவமிருக்குதடி
உன் இதழ்கள்...

சிலைபோல என் எதிரே
நீ சிலநேரங்களில்...

நெஞ்சுக்குள் எழுதுகிறேன்
உனக்காக காவியம் ஒன்று...

மார்கழி மாதத்து பனியில் முன்தலை
விழும் கூந்தலை ஒதுக்கியபடி...

மாக்கோலத்தில் கையும்
என்மேல் கண்ணுமாய்...

நீ பார்க்கும் அந்த பார்வை
அதற்காகவே நானடி...

நந்தவனம்போல நீ
மெல்ல மெல்ல நகரும்போது...

அந்த பனியிலும் எனக்கு
இதமான வெப்பம்...

உன்னோடு சேர்ந்து வாழத்தான்
இந்த ஜென்மம் எனக்கு...

உன் பார்வை முழுவதும்
என்மீது திருப்பிவிடடி...

மறுநாள் உன் தோளில்
நான் சூடும் மணமாலை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Nov-16, 7:38 pm)
பார்வை : 247

மேலே