தானாக தொலைந்து போகும்

உயிர்களிடையில்
உருவாகும் கடும் உணர்ச்சி—அது
உண்டாக்கும் பலப்பரீட்சை,

அச்சுறுத்துபவரை அல்லது
அவமதிப்பவரை
அடக்க எடுக்கும் ஆயுதம்

கட்டுக்கடங்காது போனால்
கடைசி பயணம் கைகூடும்—இல்லை
கை, கால் காணாது போகும்

ஒருபோதும் பிரிந்திராத
சொந்தங்கள் போல்
வந்துபோகும் அவ்வப்போது

மனிதனுக்கு மட்டும் தான்
முதுமை வரும்
இதற்குக் கிடையாது

மரணத்தில் தான்
இந்த இரண்டுமே
அமைதி பெறும்

இதனை வெற்றி கொள்ள
ஒரே வழி
அவசரப்படாதீர்கள்

அது எழுந்து கொள்ளும்
தாமதப்படுத்துங்கள்—கோபம்
தானாக தொலைந்து போகும்

எழுதியவர் : கோ.கணபதி (4-Nov-16, 8:08 am)
பார்வை : 75

மேலே