இனி என்ன செய்ய
உனக்கு புரியவைக்க என் ஆசைகளை
வார்த்தையாய் மாற்றி கொஞ்சம்
எதுகை மோனை சேர்த்து
கவிதை வடிவில் தந்தால்
அருமை என்கிறாய் கவிதையை
என்ன செய்ய என் ஆசையை ???
இரவில் கண்ட கனவினை
கொண்டு வந்து நினைவினில்
உன்னோடு பகிர்ந்திட ...
சலனம் சிறிதும் இல்லையே
என்ன செய்ய என் கனவினை ???
ஊருக்கெல்லாம் தெரிந்தும்
உறவுக்கெல்லாம் தெரிந்தும்
என் தெருவுக்கெல்லாம் தெரிந்தும்
உனக்கு மட்டும் புரியவில்லையே
என் காதல் உன்மேல் என்று
என்ன செய்ய என் காதலை ???