மவுனமமாய் ஒரு சம்மதம் சொல்
என்னவளே !
நீ சூடாததால்
வாடிப்போனது
மலர் மட்டுமல்ல
என் மனமும் தான் !
நீ கோலமிடாததால்
தூர்(தொலை)ந்து போனது
பூமி மட்டுமல்ல
என் புன்னகையும் தான் !
மீ திரும்பி பார்க்காததால்பார்க்காது
போனதால் தேய்ந்து போனது
நிலவு மட்டுமல்ல
என் நிம்மதியும் தான் !
உன் பார்வை படாது
கலைந்து போனது
மேகங்கள் மட்டுமல்ல
என் எதிர்கால
கனவுகளும் தான் !
நீ இதழசைக்க வேண்டாம் !
விழியசைத்திடு போதும் ;
வானமும் நம் வசப்படும் !