தனியே திரும்புகிறேன்

கல்லூரியின் கடைசிநாள் ....
உன் பயணப்பொதியை....
தம்பி ஓடிவந்து தூக்கிறான்.....!!!

உன் அருகே இருந்துவர ..
உன் அம்மா இருக்கையை ....
சரிசெய்கிறார் .....!!!

இறங்கும் இடத்தில் ...
வரவேற்க உன் உறவினர் ...!!!

உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனியே திரும்புகிறேன் ......!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Nov-16, 8:40 pm)
பார்வை : 517

மேலே