நகைச்சுவை - பிச்சைக்காரன்-ஆசாமி உரையாடல்
ஒரு பேங்க் ல ரூபா ஐநூறு, ஆயிரம் ,மாத்திக்க கியூ ,அதுல ஒரு
பிச்சைக்காரனும் நிக்கறான் , அப்போ ஒரு உரையாடல்
-------------------------------------------------------------------------------------------------
பிச்சைக்காரன் (பக்கத்தில் னிப்பவர் கிட்ட) : ஐயா, கொஞ்சம் தயவு செய்து
என் இடத்தைப் பாதிக்கிறீங்க , நான் இப்போ வந்துடறேன்
பக்கத்துக்கு ஆசாமி : அப்படி என்னய்யா ஒனக்கு அவசரம் ?
பிச்சைக்காரன் : ஐயா, என் கிட்டே சில்லறை சின்ன நோட்டுகள் இல்ல
இட்டிலி, காபி சாப்பிட, கொஞ்சம் ATM , ல,பணம்
எடுத்து டு வரேன் கை செலவுக்கு
, ஆசாமி : பிச்சைக்காரனுக்கு atm கார்டு ? யார் கொடுத்தாங்க
பிச்சைக்காரன் : ஐயா , எனக்கு அட்ரஸ் புரூப், ஆதார் எல்லாம் இருக்கு
இந்த பேங்க் ல அக்கௌன்ட் ம் இருக்குங்க !
ஆசாமி : அப்போ ஏன் பிச்சை எடுக்கற ?
பிச்சைக்காரன் ; ஐயா பிச்சை எடுப்பு ஒரு profession ங்க !
ஆசாமி : ( அசந்து போய்), சரி, சரி, சீக்கிரம் போய்ட்டுவா
அது வரைக்கும் ஒன இடம் பாத்துக்கறேன் !