நான் ஒரு காதலன், குழந்தை சுபாவத்துடன்
நீ
நில் என்று
சொன்னாலும்
செல் என்று
சொன்னாலும்
வாசலில் நிற்கும்
யாசகனின் பயணம்
முடிவதில்லை....
நீ
ஒதுங்கிச்சென்றாலும்
ஓடி ஒளிந்தாலும்
இந்த காதலன் மனக்கதவு
மூடாமல்
பட பட வென அடிக்கும்,
அதைக்கேட்டு
இந்த காதலன் தன்னையே
ஒரு குழந்தை போல பாவித்து
உண்ணாமல் உறங்காமல்
காத்திருப்பான்......
ஏனெனில்
காதலன் யாசகன் மட்டுமல்ல,
யாத்ரிகன் கூடத்தான்..