பள்ளிகூடம்

பள்ளிகூடம்...
அடடா சொல்லும் போதே சொல்லிலடங்கா இன்பமான காலம் அது. ..

ஆடைகளில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தாலும் அது தான் எங்களுக்கு ஆடம்பரம் என்ற காலம்...

அன்னையின் அன்பை போன்றது அந்த ஆலமர அடிவார அழகின் காலம்...

மதிய உணவு என்பதை விட மணி அடித்தால் உணவு என்று வாழ்ந்த காலம்...

விளையாட்டையே முழுநேரமாக முன்னிருத்திய காலம்...

மூங்கில் அடிக்கு பயந்து மூலை முடுக்கெல்லாம் ஓடிய காலம்...

ஆசிரியர் வரக்கூடாது என்பதற்காக அம்மனுக்கு ஐந்தாறு அபிஷகம் செய்த காலம்...
அடடா. ....

கணக்கு வாத்தியார்கை பிரம்பு கண்டாலே கதிகலங்கி கண்ணில் நீர் வரும் காலம் ...

கைத்தட்டலுக்கு பஞ்சம் இல்லை கைகளில் காசும் இல்லை காணாத இன்பமும் இல்லை இனி காணவும் முடியாது என் பள்ளி வாழ்க்கையை.....

எழுதியவர் : ஞானவள்ளல் (17-Nov-16, 11:39 am)
சேர்த்தது : ஞானவள்ளல்
பார்வை : 352

மேலே