கனமான காதல்

காற்றில் கலக்கவும் இல்லை -கண்ணீரில்
கரையவும் இல்லை உன் நினைவுகள்
கனத்த இதயத்துடன் உன்னை காண காத்துயிருந்த
நொடிபொழுதுகளுக்குத்தான் தெரியும் எனது வலிகள்
எனது மூச்சுக்காற்றுக்கூட உன் சுவாசம் தேடி
அலைகிறது உனக்கு ஏன் தெரியவில்லை
பலஆயீரம் அடி தள்ளி வந்தாலும் நீ தான் வருகிறாய்
என தலை நிமிராமல் என்னால் கணிக்க முடியும்
என்னை புரிந்து கொள்ள இவ்வளவு காலமா?-அட
காலம் கடப்பதை நினைத்து கூட நான் கலங்கவில்லை
உன்னவளின் நீ புரிந்து கொள்ளவில்லை
என்னும்போது விழி வாயில் நிற்கும் கண்ணீர்
துளிகள் கூட விழி தாண்ட மறுக்கிறது.

எழுதியவர் : prabavathi (18-Nov-16, 3:04 pm)
Tanglish : kanamaana kaadhal
பார்வை : 276

மேலே