தவறை உணர்ந்தேன்!..

இதயத்தை,
கோவிலாக்கி,
"என்னவளை" சிலையாக்கி,
கண்களால் ஆராதனையும்,
கவிதைகளால் அர்ச்சணையும்,
செய்து தினம் -என்
ஆசைகளையும், அள்ளியெடுத்து,
அபிஷேகமும், செய்தேன்,
பின்புதான்..... என் தவறை உணர்ந்தேன்,
அவளை கோவில் சிலையாக எண்ணியதால்
அப்படியே இருந்துவிட்டாள்.

எழுதியவர் : கு.காமராஜ். (4-Jul-11, 2:37 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 478

மேலே