நான்

நான்
தனிமைப் பூ
பூக்கும் பூங்கா!
என்னுள் எதற்கு
தளிர்களை
நடவு செய்கிறாய் ?

நான்
கண்ணீரை
உதிர்த்து நிற்கும்
கற்பக விருட்சம்
என்னைப் பற்றி
என்ன கவிதை
எழுத வந்திருக்கிறாய் ?

போகுமிடமெல்லாம்
பூவிதைகளை தூவும்
காற்றென
என்னை நீ
கடக்கும் போதெல்லாம்
காதல் செடியை
உன் பார்வைகளால்
பதியானிடுவதும் ஏன் ?

நானொரு
பாலையென்பதும்
அறியாயோ நீ?

வசந்தமே!
நான்
வானம் இழந்த பூமி
வையம் மறந்த சாமி
எனக்கென எதற்கு
இனியும் பசுமை
என்னை என்னோடு
விட்டு விடு!

எழுதியவர் : (26-Nov-16, 6:01 pm)
Tanglish : naan
பார்வை : 172

மேலே