தமிழ் மாதத்தின் சிறப்பு 555
தமிழ் சிறப்பு...
சித்திரை வெயிலை
இளநீர் பதனீர் தணிக்க...
சித்திரை விழாக்கள்
கோலாகலமாகும்...
வைகாசியில் வைபோகம்
கன்னியரும் காளையரும்...
மணமாலைகள் சூடிட
மங்கலமாகிவிடும்...
ஆனியில் உச்சிவெயில்
தணியும்...
ஊரெல்லாம் மெல்லிய
தென்றல் வீசும்...
ஆடியில் ஆறுகளில்
புதுப்புனல் பொங்கிடும்...
உழவு ஆடிப்பட்டம்
தேடி விதைக்கும்...
ஆவணி வந்ததும்
நல்வரவு வந்திடும்...
தடைகள் நீங்கி
சுபகாரியங்களும் நிகழ்ந்திடும்...
புரட்டாசி விரதம் மாந்தரின்
மனதை பக்குவப்படுத்த உதவிடும்...
ஐப்பசி மழை அடைமழை ஊரெல்லாம்
தீவுபோல் காட்சியளிக்கும்...
கார்த்திகையில் இல்லந்தோறும்
அகல்விளக்கு ஒளிர்ந்திட...
நன்மைகள்
குடி புகுந்திடும்...
மார்கழி குளிரில் வாசல்களில்
கோலங்களும்...
வயல்களில் வசந்தங்களின்
பூத்திருக்கும்...
தை பிறந்தால் தமிழர் வாழ்வில்
வளம் கொழிக்கும்...
மாசியில் மங்களம்
சூடிடும்...
பங்குனியில் ஊரெங்கும்
திருவிழா தெருவெங்கும் தேரோட்டம்.....
[தமிழ் மாதத்தின் சிறப்பு நான் படித்து ரசித்தவை
எழுத்து நண்பர்களுக்கும் ]