துறவென்பது
உறவின் நிலையறிந்து,
வாழ்வின்
உண்மைப் பொருள் தெரிந்து
துறவு துளிர்க்கவேண்டும்,
அது
தூயதாய் இருக்கவேண்டும்..
அறியாத சிறுவயதில்
பிள்ளைகள் தலையில்,
அறியாமையால் ஏற்றும்
துறவுச் சுமை
தருவதில்லை பயனெதுவுமே..
அது
அவர்களுக்கு ஒரு
வேடிக்கை விளையாட்டே...!

