பணம்
நறுமணம் முகர தெரியாதவனுக்கு
பூத்திருக்கும் அவன் தோட்டத்தில்
முகந்திருந்தால் நெகிழ்ச்சி அடைந்திருப்பான் இப்புவியில் !!
இன்பம், இனிமை, இறக்கம், அன்பு என்னும் பல குணங்களை கொண்ட
நன்மக்களை பூச்செண்டாய் கோர்த்து இருப்பான் !!
ஆனால் அவன் தோட்டம் பலவண்ணங்களையும், நறுமணங்களையும்
ஏந்தி தவிக்கின்றன
பகிர இடம்மில்லாமல் பதுங்குகின்றன
வாடி வதங்குகின்றன !!
முகர தெரிந்தவன் - தோட்டத்தில்
ஒத்தை ரோஜா
எல்லா குணங்களையும் கொண்டு
நித்தமும் இன்பமாய் நறுமணக்கிறது !!
முகர்ந்தும் முகராமலும்
தோட்டத்தையும் ரோஜாவையும்
தேடியே ஒரு கூட்டம்
அலைந்து கொண்டு தான்
இருக்கின்றது..........