படம் உதவி முனைவர் விநாயக மூர்த்தி படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி
படம் உதவி முனைவர் விநாயக மூர்த்தி !
படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
விளையாடவில்லை சகதியில் இருவரும்
விளைச்சல் காண பக்குவப்படுத்துகின்றனர் !
மண்ணை மிதிப்பது மதிப்போடுதான்
மண்ணும் வாரி வழங்கும் பொற்க் கதிர்களை !
ஏட்டுக் கல்வியோடு நின்று விடாதே மகனே
என்று விவசாயக் கல்வியும் கற்பிக்கின்றார் !
இது வெறும் சேறு அல்ல மனிதர்களே
இவைதான் நமக்குச் சோறு போடும் மண் !
.