தவமா தவமிருந்து பெத்த புள்ள

திருமணம் முடிந்த முப்பதாம் நாளிலிருந்து கேள்விகள்
காதைத் துழைக்கும்
ஏம்புள்ள விசேசமா..??
தள்ளிப்போச்சா…??
மருமக உண்டாயிருக்காளா???
எங்க ஒன்னியும் காணோம் என
எம்புள்ள என் மாமியார சொல்ல விடல
தேடாம கெடச்ச செல்வம் எம்புள்ள
தானா வந்த தங்கம் எம்புள்ள
ஊரார பேச விடாம எங்க அன்புக்கு
கெடச்ச பரிசு எம்புள்ள
இந்த சந்தோஷத்துக்காக நாங்களும்
தவமிருந்துருக்கோம் போல
போன ஜென்மத்துல
எம்புள்ளையும் தவமிருந்து பெத்த புள்ளதான்..

எழுதியவர் : மனோகவி (7-Dec-16, 12:29 pm)
சேர்த்தது : Nammakavithai
பார்வை : 761

மேலே