கருவறை 2
காப்பான இவ்வறையை கடந்து செல்ல மனமில்லை
காலம் பத்து முடிந்ததினால்
கயவரை காண செல்கிறேன்
கேள்வி குறியை கண்ணில் சுமந்து
என் உயிர் குறியை காணவே
உறவெல்லாம் நிக்கிது
உயிர்வளியில் துடித்தாலும்
தாய் கூட தவிக்கிறாள்
என் இனம் தனை அறிந்திடவே
மருத்துவச்சி ஏங்குறா
ஆண்புல்லையா இருந்தா
ஐநூறு ரூபாய் வாங்கலாம்
பதற்றங்கள் பற்றி கொண்டது
பத்து மாத வினாவிற்கு
விடை ஒன்று அறிந்திடவே
விடைபெற்று வெளிவந்தேன்
தொப்புள் கொடி அறுத்துவிட்டால்
நாணயம் கிடைக்காத வேதனையில்
மயக்கத்தில் இருந்த தாய்
மன்றாடி கேட்கிறாள்
மகன் தானே
மருத்துவச்சி தலைஅசைவில்
காவிரியை கண்ணில் சுமந்து -என்
கண் பாராமல் சரிந்தாள்
தொடரும் ...........