மொழி

மனதோடு மனிதம் வாழட்டும்
********************************

ஒரு வார்த்தையை
ஒன்பது விதங்களில் சொல்லலாம்
இருப்பதென்னவோ
ஒரு மனம் தான்.......
வாழ்வதென்னவோ
ஒரு வாழ்க்கை தான்......

ஆதலால்
அன்போடும்
பண்போடும் பேசுங்கள்.....
மொழி ஆயுதம் அல்ல.....
உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் ஊடகம்.....
மொழியே இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம்....
ஆனால் உணர்வுகள் இல்லாமல் வாழ முடியாது.....

மொழி
தமிழ் மொழி......
திகட்டாத தேனமுது......
தமிழ் தாய்மடி .........
தமிழை நேசியுங்கள்.....
தரமாய் வாழ்வீர்கள்..................

இசையை ரசியுங்கள்......
இயற்கையை காணுங்கள்......
மனது இலகுவாகிவிடும்..........

உங்களில் ஒருத்தி
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 8:57 am)
Tanglish : mozhi
பார்வை : 401

மேலே