ஒன்றானவன்
ஒன்றானவன் என்றானவன்,
நினைவில் என்றும் நின்றானவன்,
நித்திலத்தில் தனியானவன்,
எக்காலத்திலும் மேலானவன்,
எதிலும் முதல் ஆனவன்,
முப்போதும் சரியானவன்,
முழுமுதற் பொருளானவன்,
சத்தியத்திற்கு நிகரானவன் ,
கருணை காட்டுவதில் தாயானவன்,
காத்தருள்வதில் முதலானவன்,
ஆனை முகத்து தொந்திக் கணபதியை,
கருத்தில் வைத்து வணங்கிடுவோம்.