செல்லாக்காசு

செல்லாக்காசு
""""********************""""
பணமெல்லாம் பலியிட்டாச்சு
பண்டமாற்று முறைக்கு மாறியாச்சு
நகரத்து கால்நடைகட்கு இரையாச்சு
வங்கிக்கு வாராமலே புதுப்பணமெல்லாம்
தொழிலதிபர்களின் கைகளுக்கு போயாச்சு

அன்றாட வேலைக்கு போறவனெல்லாம்
அரை நாளு வங்கிக்கு செலவு செஞ்சு
கால்கடுக்க நின்னாலும்
அவன் தொகை அவனுக்கு முழுசா கிடைக்கலையே

மோடிக்கு சாடியா நின்னோம்
நின்ன இடத்தில் இன்னும் நிக்கோம்
பணம் வர காத்து கிடக்கோம்
பட்டுனுதான் போக போறோம்!

பெருமை கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களே!
நீங்கள் எங்களுடன் வங்கிக்கு வந்தீரா
வரிசையில் நின்றீரா
அங்கே நின்றிற்கும் எவருக்கவேணும்
உணவு தண்ணீர் தான் கொடுத்தீரா
செத்து மடிந்ததை கண்டீரோ?
ப. சம்பத் குமார்.

எழுதியவர் : ப. சம்பத் குமார் (18-Dec-16, 8:19 pm)
பார்வை : 268

மேலே